Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM
தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதியில் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை சரிபார்த்த பிறகே மக்கள் வர அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
குமுளியில் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், தாமரைக்கண்ணன் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், டாக்டர் சாம்ஜிரேவந்த் உள்ளிட்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தினமும் இப்பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT