Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பூங்காக்களில் நிழல் தரும் மரங்களை அதிக அளவில் நட்டு குறுங்காடுகளை வளர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை, வல்லன்குமாரவிளையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு சொந்தமான பிற பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைக்கப்பட உள்ளது. தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT