Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM
நாகர்கோவில்: ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்டறிந்து, சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். களியக்காவிளை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக தினமும் 10 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் கரோனா சளி பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமு்ம், 4 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்கின்றனர்.
கோட்டாறு சவேரியார் ஆலய விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT