Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM
விளாத்திகுளம் அருகே பனையடிப்பட்டி கிராமம் சாலமன் நகரைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம்(36). இவர், விளாத்திகுளத்தில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா(30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆசிர்வாதத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரஞ்சிதா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தினர். ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசீர்வாதம் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT