Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

காட்டுச்சேரி விளையாட்டரங்கத்தில் ஆட்சியர் ஆய்வு :

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா காட்டுச்சேரி சிறு விளையாட்டரங்கத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் தலா ரூ.3 கோடியில் அமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தில், மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.அதன்அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, ஆட்சியர் ரா.லலிதா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வட்டாட்சியர் ஹரிஹரன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x