Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
முத்தாபுதுப்பேட்டையில் இந்திய விமானப் படையின் பயிற்சி தளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் விஸ்வகர்மா(23) கடந்த 3 ஆண்டுகளாக கண்காணிப்பு கோபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்றுமுன்தினம் ஆகாஷ் விஸ்வகர்மா கண்காணிப்பு கோபுரத்திலேயே தலையில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து இறந்துகிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், ஆகாஷ் பாதுகாப்புப் பணிக்காக வைத்திருந்த ‘இன்சாஸ்’ வகை துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. முத்தாபுதுப்பேட்டை போலீஸார் ஆகாஷ் சடலத்தைமீட்டு, இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT