Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் ஆக்சீலியம் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சரோஜா (74). கணவர் உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தவர் நேற்று முன்தினம் காட்பாடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால், வீட்டின் கதவு எதுவும் உடைக்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறை யினர் விசாரித்து வருவதுடன் சரோஜாவின் மகன்கள் அல்லது மகள்கள் எடுத்திருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT