Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM

கரோனா தொற்றுக்கு மேலும் 453 பேர் பாதிப்பு :

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை/திருவண்ணாமலை: வேலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 46,197 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 45,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை யில் 225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 957 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அதை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 79 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 237 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள் ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 206 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,700-ஆக உயர்ந்துள்ளது. 45,695 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x