Published : 15 Jun 2021 03:15 AM
Last Updated : 15 Jun 2021 03:15 AM
குழந்தைகள், சிறுவர்கள், மாணவி
கள், பெண்களுக்கு எதிரான வழக்குகளில் காவல் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னையில் பள்ளி ஆசிரியர்கள் இருவர்அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு விளையாடும்போது, அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து லைவ்வாக விளையா டிக்கொண்டே ஆலோசனை கூறிய வாறு, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி மதன் என்ற இளைஞர் பேசும் ஆபாச வீடியோக்கள் அண்மையில் வைரலாகின.
சிறுவர், சிறுமிகளிடம் அவர் மிகவும் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசும் வீடியோக்கள் யூ-டியூப்சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், அவர் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி, மதன் நடத்தி வரும் இரு யூ-டியூப் தளங்களில் ஆபாச உரையாடல் வீடியோக்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதைலட்சக்கணக்கானோர் பின்தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு காரணமாகவும், தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதாலும் பலமாணவ, மாணவிகளின் எதிர்காலம் வீணாகும் என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் பலருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, எல்லை மீறி செயல்படும் மதன் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிலர் புகார் அளித்துள்ளனர். "சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சம்பந்தப்பட்ட மதன் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். இந்தவிவகாரத்தை சைபர் க்ரைம் காவல் துறையினர் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகுமாறு புளியந்தோப்பு சைபர் க்ரைம்காவல் துறையினர் மதனுக்குஅறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், அவர் நேற்று நேரில் ஆஜராக வில்லை. எனவே, அவர் தலைமறை வானதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, அவரதுயூ-டியூப் சேனலை முடக்கும்நடவடிக்கையிலும் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT