Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 1,017 பரிசோதனை முடிவுகளில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 13,876 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 877 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT