Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி யில் காவல்துறை மற்றும் கம்பம் நேதாஜி அறக்கட்டளை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் சார்பு ஆய்வாளர் மாயன் தலைமை வகித்தார். நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி பஞ்சு ராஜா முன்னிலை வகித்தார். மக்களுக்கு மூலிகை கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் முகக்கவசம் வழங்கி சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பதுடன், தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT