Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
புதுக்கோட்டை: 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, நிர்வாகிகள் மகா, கோபி, மணி, மகாதிர், வெங்கடேஷ், பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT