Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், கோட்டாட்சியா் தனப்பிரியா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
எஸ். பி. சண்முகநாதன் எம்எல்ஏ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சமூக நல பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை என, ரூ. 7.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT