Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
காரைக்கால்: காரைக்காலில் உள்ள திரையரங்குகளில் பொங்கலையொட்டி வெளியான திரைப்படங்களை பார்ப்பதற்கு, அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதுடன், கள்ளத்தனமாகவும் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், காரைக்கால் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி அலுவலர்கள் காரைக்காலில் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவதாக திரையரங்க நிர்வாகிகளிடம் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT