Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

சேத்துப்பட்டில் சோதனை சாவடி திறப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் புதிய சோதனைச் சாவடி நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமை வகித்தார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவரும், கல்வியாளருமான செல்வராஜன், மாவட்டச் செயலாளர் கருணாநிதி, மாவட்டப் பொருளாளர் முகமது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் நந்தினி தேவி வரவேற்றார். புதிய சோதனைச் சாவடியை தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பணி, கண்ணமங்கலம் பேரூராட்சியில் நடைபெறுகிறது. அதேபோல், சேத்துப்பட்டிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து குற்றங்களை தடுக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவிட முன் வர வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x