Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

கீழே கிடந்த தங்க மோதிரம் காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கீழே கிடந்த தங்க மோதிரத்தை காவல் துறையினரிடம் பெட்டிக்கடை உரிமையாளர் ஒப்படைத்தார்.

வாணியம்பாடி பள்ளிப்பட்டு கூட்டுச் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராஜாமணி. இவர், நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடைக்கு அருகே கீழே மோதிரம் இருப்பதைக் கண்டார். எடுத்துப் பார்த்தபோது 4 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் என்பதால் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியின் உத்தரவின்பேரில் காவல் துறையினர் நேரடியாகச் சென்று ராஜாமணியிடம் இருந்து மோதிரத்தை பெற்றுக்கொண்டனர். மோதிரத்தை தவறவிட்ட நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x