Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,763 கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 1,763 கண்மாய்களில் 110 கண்மாய்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 915 கண்மாய்கள் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மீதமுள்ள கண்மாய்களில் 25 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT