Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு :

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை படைக்கலங்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்களும் தங்களது துப்பாக்கியை வரும் 21-ம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பாதுகாப் பாக ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x