Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM
திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வுமையத் தலைவர் செள.சிவசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பரங்குன்றத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வுமையத்தில் செப்.21 நாட்டுக்கோழி வளர்ப்பு, செப்.23 வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இலவசமாக நடைபெற உள்ளது.
இதில், கால்நடை விவசாயி கள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 88254 05260 மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT