Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

குடிசை வீட்டில் தீ விபத்து :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்ரி(70). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் சமையல் செய்ய அடுப்பை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பற்றியது. இதைக்கண்டதும் சாவித்ரி வெளியே ஓடி வந்தார். உடனே, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், அதற்குள்ளாக தீ மளமளவென பரவி அடுத்த வீட்டுக்கும் பரவியது. இதையடுத்து, ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தினால் குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x