Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
மதுரையில் பொதுமக்களிளிடம் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நடிகர் வையாபுரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கரோணா பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாட்டுத்தாவணி பகுதியில் நடைபெற்றது. ஹோட்டல்கள் சங்கத் தலைவர் குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி பங்கேற்றார்.
அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களை நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வையாபுரி எடுத்துரைத்தார். பின்னர் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி, பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் அதை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT