Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

பெரம்பலூர் அருகே ரூ.99 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூர்

பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான நிலை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் செட்டிக்குளம் மலையடிவார சாலையில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டபோது, நாரணமங்கலத்தை சேர்ந்த அய்யாவு மகன் அசோகன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.99 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் தொகுதி தேர்தல் அலுவலரான சார் ஆட்சியர் பத்மஜாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் பெரம்பலூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x