Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

அக்.11, 12-ல் : குருப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு :

குருப்-4 தேர்வுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, அக்.11, 12-ம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 1.9.2019 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-4தேர்வின் 2-வது கட்ட சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுஅக்.11, 12-ம் தேதிகளில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்து தொடர்புடைய விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்வாயிலாக தகவல் அனுப்பப்படும். தபால் மூலமாக எவ்வித தகவலும் அனுப்பப்பட மாட்டாது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x