Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொண்டு சட்டப்பேரவை ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று காலை புதிதாக பதவியேற்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரை வாழ்த்தி முதல்வர் பேசியதாவது:
அளவற்ற மகிழ்ச்சி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக மக்களுக்கு நன்றி. பேரவைத் தலைவர் இருக்கையில் மு.அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தென்மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.செல்லபாண்டியன், சி.பா.ஆதித்தனார், பி.எச்.பாண்டியன், மு.தமிழ்க்குடிமகன், சேடப்பட்டி முத்தையா,பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், கா.காளிமுத்து, இரா.ஆவுடையப்பன் ஆகியோரைத் தொடர்ந்து பேரவைத் தலைவராக அப்பாவுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அந்த மரபுவழி நின்று அப்பாவுவும் ஜனநாயக ரீதியில் பேரவையைநடத்துவார் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை.
நாணயத்தின் இரு பக்கங்கள்
பேரவைத் தலைவரின் உத்தரவுகளுக்கு, கட்டளைகளுக்கு, கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நிச்சயமாக செயல்படுவோம். ‘சட்டப்பேரவையை அதிகார அமைப்பாக இல்லாமல், சமூகத்துக்கு நன்மை செய்யும் அமைப்பாக கருத வேண்டும்’ என்று பெரியாரும், ‘ஜனநாயகநாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிஎன்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்துபோயிருந்தால் அது செல்லாக் காசாகி விடும்’ என்று அண்ணாவும்,‘ஒரு மனிதனின் முகத்தில் உள்ளநிறைகளை மட்டுமல்ல, குறைகளையும் காட்டுவதுதான் கண்ணாடி. அதுபோல் ஆளுங்கட்சியின் நிறைகுறைகளை காட்டுவதுதான் சட்டப்பேரவை’ என்று கருணாநிதியும் கூறியிருக்கிறார்கள்.
கர்வம், ஆணவம் இருக்காது
இவை அனைத்தையும் அறிந்த தாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பேதம் பார்க்காமல், அனைவருக்கும் பொதுவானவராக இருந்து, பழம்பெருமை வாய்ந்தமிகத் தொன்மையான இந்த அவையை அதற்குரிய மாண்புடன்நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அவையின் மாண்புகெடாது, எவ்வித விரோத உணர்ச்சிக்கும் இடம் தராமல், ஜனநாயக மரபுகளைக் காக்கக்கூடிய வகையில் ஆளுங்கட்சி செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கு.பிச்சாண்டி, 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரவையின் அனைத்து விவாதங்களிலும் முழுமையாக பங்கெடுத்தவர். உறுப்பினர்கள் சொல்லக்கூடிய கருத்துகளை எல்லாம் ஆழமாக உள்வாங்கக் கூடியவர். பேரவை அலுவல் நேரம் நிறைவு பெறும்வரை, சில நேரம் மதிய உணவைக்கூட மறந்து பேரவைநடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவர் பிச்சாண்டி. அவையின் மாண்பைக் காப்பாற்ற பேரவைத் தலைவருக்கு அவர் நிச்சயம் துணையாக இருப்பார்.
ஜனநாயகத்தை பேணிக் காப்போம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT