Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM
வர்மா ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவமுகாம் இன்று (டிச.7) திருவள்ளூர் பாரதிதாசன் தெருவில் உள்ளவர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் நடைபெறுகிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு வர்மா ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகம் புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைபெறுகின்றன.
திருவள்ளூர் பாரதிதாசன் தெருவில் உள்ள வர்மா ஆயுர்வேதமருத்துவமனையில் நடைபெறும்சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஆயுர்வேத டாக்டர் கவுதமன் தலைமை தாங்கி, பரிசோதனைகளை செய்துசிகிச்சை அளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஆயுர்வேத சிகிச்சையில்பல்வேறு நோய்கள் அறுவைசிகிச்சை இன்றி குணமாக்கப்படுகிறது. முதுகுத் தண்டுவட வலிகள், மூட்டு வலிகள், சைனஸ் பிரச்சினைகள், ஆஸ்துமா, சிறுநீரகக்கல், உறுப்பு செயலிழப்பு, கருமுட்டைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குடல் இறக்கம் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’என்றார். மேலும் தொடர்புக்கு 9500946634 /35.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT