Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM

கஞ்சா கடத்திய 3 பேர் கைது :

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாகையை அடுத்த பாப்பாக்கோவில் சாலையில் நாகப்பட்டினம் நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஒரு மூட்டையுடன் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீஸார், அவர்கள் கொண்டு வந்த மூட்டையை சோதனையிட்டதில், மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன்(51), கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(53), தோப்புத்துறையைச் சேர்ந்த ஹலித்(54) ஆகியோர் என்பதும், 3 பேரும் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் விற்பனை செய்ய இருசக்கர வாகனத்தில் கஞ்சா மூட்டையை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x