Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

சமூக வலைதளம் மூலம் பழகி : ரூ.34 லட்சம் பறித்த பெண் கைது :

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா(25). இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, திருவொற்றியூர், கடலோர காவல் படையில் மாற்றுப்பணியில் இருந்து வருகிறார்.

பாரதிராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆவடி, ஆனந்த நகர் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா(26) என்ற பெண் அறிமுகமாகி, பழகி வந்துள்ளார்.

தன்னை மருத்துவ மாணவி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண், பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். பிறகு தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, பாரதிராஜாவிடம் இருந்து ரூ.14 லட்சத்தை பெற்றுள்ளார். பிறகு, அவருடன் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாரதிராஜாவின் உறவினர் ஒருவரிடமும் திருமண ஆசையை காட்டி ரூ.20 லட்சம் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆவடி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆவடியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்த ஐஸ்வர்யாதான் இருவரையும் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x