Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த 3 லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமைப்பு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மணிமாறன் தலைமையில், வருவாய் துறையினர், ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேற்று செம்மணாம்பதி பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட நிலத்தை பொக்லைன் மூலம் தோண்டி, அதிலிருந்து மண் மாதிரி எடுத்தனர்.
மண் மாதிரியை கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி உள்ளனர். “ஆய்வு முடிவின் அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்படும்” என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT