Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை யாரும் வரவில்லை :

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உடன் இருந்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 73 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. வேலைவாய்ப்பு முகாம் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை டெல்டா வைரஸ் பாதிப்புதான் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், போதுமான அளவு பாதுகாப்பும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு யாரும் வரவில்லை.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x