Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

2 எஸ்.பி.க்கள் உட்பட5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் :

செங்கல்பட்டு, நெல்லை மாவட்ட எஸ்.பிக்கள் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

மதுரை போக்குவரத்து துணைஆணையராக இருந்த ஈஸ்வர், சென்னை புளியந்தோப்பு துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி, மதுரைபோக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணன், சென்னை பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி சிறப்புப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x