Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலை பண்டிட் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி, காங்கயம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்த 10 வயது சிறுமி, திருப்பூர் மாநகரை சேர்ந்த 7 வயது சிறுமி ஆகிய 3 பேர் உட்பட 5 பேருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. பரிசோதனையில் இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து அனைவரும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT