Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

கடைகளை கட்டாயமாக : மூடவைத்த போலீஸார் :

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுஆய்வு செய்ய வந்தபோது, வரதராஜபுரத்தில் இருந்த கடைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக மூடச் செய்தனர். இதனால் அத்தியாவசிய தேவைகளை வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, "முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து வந்து கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், முதல்வர் வருகைக்காக போலீஸார் கடைகளைத் திறக்க விடாமல் மூடிவிட்டனர். 12 மணிக்கு பிறகே கடைகளைத் திறக்க அனுமதித்தனர்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x