Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

தனியார் பேருந்து மீது கல்வீச்சு :

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே தனியார் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஓட்டுநர் காயமடைந்தார்.

திருநெல்வேலியிலிருந்து களக்காட்டுக்கு சிங்கிகுளம் வழியாக தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து நேற்று முன்தினம் இரவில் களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை அழகர் (50) என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். சிங்கிகுளத்தில் திடீரென்று அப் பேருந்து மீது சிலர் கற்களை வீசிவிட்டு தப்பியோடினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. ஓட்டுநர் காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x