Published : 28 Nov 2021 03:08 AM
Last Updated : 28 Nov 2021 03:08 AM
மழை வெள்ளத்தால் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. படகு மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன.
வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்துபெய்த இடைவிடாத கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று இரவு 18 செமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் வல்லாஞ்சேரி ஏரி அதன் முழுக்கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தன. கூடுவாஞ்சேரி முதல் தைலாவரம் வரை ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கூடுவாஞ்சேரி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முடங்கியது. இதனால் வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் என 10 கிமீ தூரம் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
மேலும் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கூடுவாஞ்சேரியில் பல நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால், படகு மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்றன.
மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், அமுதன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். ஒரு சிலர் வீடுகளை காலி செய்தும் சென்றுள்ளனர். அவர்களை தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர்ரப்பர் படகு மூலம் மீட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் உணவு, பால், ரொட்டி, குடிநீரை, படகு மூலம் சென்று கொடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகுமீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள்வேதனையுடன் தெரிவித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.நகர், ஜெகதீஷ் நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை விட்ட நிலையிலும் வீடுகளைச் சுற்றி மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது.
அமைச்சர் உத்தரவு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT