Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை: 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தில் ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை மறுக்கும் மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போராடும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 734 விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும், மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்ததாக கூறி மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்தையன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, அண்ணா நுழைவு வாயிலில் இருந்து போளூர் சாலை வழியாக ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x