Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

தாம்பரம் மாநகராட்சி புதிய ஆணையர் பதவியேற்பு :

தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக ஆளுநர் கடந்த5-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து தாம்பரம்நகராட்சி ஆணையராக இருந்த இரா.லெட்சுமணன் கூடுதல் பொறுப்பாக ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த இளங்கோவன் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக 24-ம் தேதி பணிமாற்றம் செய்யப்பட்டார்.தாம்பரம் மாநகராட்சியின் முதல்ஆணையராக இளங்கோவன் நேற்று மாலை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x