Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

அரசு உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத உள்துறை கூடுதல் தலைமை செயலர், காவல் துறை உயர் அதிகாரி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் காலியாக உள்ள 24 கூடுதல் கண்காணிப் பாளர்கள், 12 சிறைத்துறை சமூக ஆர்வலர்கள் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தாத உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், காவல் துறை மற்றும் சீர்திருத்த சேவை தலைவர் சுனில் குமார் சிங் ஆகியோர் மீது மதுரையை சேர்ந்த கே.ஆர்.ராஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்னிலையில் விசார ணைக்கு வந்தது.

மனு தொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலர், காவல்துறை மற்றும் சீர்திருத்த சேவை தலைவர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்த ரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x