Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

ஜெயங்கொண்டம் அருகே சாக்குமூட்டையில் இருந்த சாமி சிலைகள் மீட்பு :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் தண்டலை கிராமத்தில் டீ கடை நடத்தி வருபவர் வேல்முருகன்(38). இவர், கடந்த 23-ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்ட முயன்ற போது, அங்குள்ள ஒரு இருக்கையின் அடியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில், செம்பால் ஆன 12 செ.மீ உயரம் உள்ள கருடபகவான் மற்றும் அம்மன் சிலை, 8 செ.மீ உயரமுள்ள பெருமாள் சிலை, 6 செ.மீ உயரமுள்ள நடராஜர் சிலை, 5 செ.மீ உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை என 5 சிலைகள் மற்றும் ஒரு தூபக்கால் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேல்முருகன் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸார் சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருச்சி சிலை தடுப்பு தனிப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவுறுத்தலின்பேரில், மீட்கப்பட்ட சிலைகளை ஜெயங்கொண்டம் கருவூலத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். மேலும், அந்த சிலைகளை அங்கு போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x