Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த - அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் :

கோவை

கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாநகரில் டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கும் பொருட்களை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 79-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், அதிகப்படியான லார்வா கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக, அக்குடியிருப்பு தொடர்புடைய நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x