Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தருமபுரி நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, ‘தருமபுரி ரயில் நிலைய சாலையை தண்ணீர் தேங்காத வகையில் தரமுள்ள சாலையாக மேம்படுத்த வேண்டும். தருமபுரி ரயில் நிலைய வளா கத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணச் சீட்டு வழங்க கூடுதல் கவுன்டர் திறக்க வேண்டும். ரயில் நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ள ஏடிஎம் இயந்திரங் களை மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

ரயில்நிலைய மேம்பாடு குறித்து ஏற்கெனவே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நட வடிக்கை இல்லை. விரைந்து நட வடிக்கை எடுக்கப் படா விட்டால் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும்’ என்று பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, மாவட்ட செயலாளர் குமார், மாவட்டசெயற்குழு உறுப்பினர் கிரைஸாமேரி, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில், தருமபுரி ரயில் நிலைய மேலாளர் பெருமாளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x