Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

புதுச்சேரிக்கு கோவா அரசின் சிறப்புக்குழு வருகை : பேரவைத் தலைவருடன் சந்திப்பு

புதுச்சேரி மாநில சட்டப் பேரவை யின் செயல்பாடுகள், இங்கு பயன்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் இங்குள்ள பண்பாடுகள் குறித்து அறிய கோவாவில் இருந்து, அம்மாநில அரசு சார்பில் ஒரு குழு நேற்று புதுச்சேரி வந்தது.

கோவா மாநில சட்டப்பேரவை யின் முன்னாள் எம்எல்ஏக்கள் விக்டர் கோன்சால்விஸ் , மோகன்அமேஹஸ்கர், உலாஸ் அஷ்னோட்கர், தர்மா சதோன்கர், விஷ்ணுபிரபு மற்றும் சட்டப்பேரவை இணை செயலர் ஹெர்குலஸ் நெரோன்கா, கிஷோர் சிரிகோன்கர், உதவி கணக்கு அதிகாரி திலிப் பர்வார்கர், சட்டப்பேரவை காவல் அதிகாரி தீபக் போன்சால், சட்டப்பேரவைத் தலைவர் உதவியாளர் கரிக்கர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்கள் புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் செல்வத்தை சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினர்.அப்போது, புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் செயல்பாடுகள், இங்கு பயன்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் இங்குள்ள பண்பாட்டுக் கூறுகளை கேட்டறிந்தனர்.

குறிப்பாக, சுற்றுலாவை மையமாக வைத்து கோவா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் செயல்படுகின்றன. இவ்விரு மாநிலங்களிலும் சுற்றுலா மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் கோவா வர வேண்டுமென, அம்மாநில முன்னாள் எம்எல்ஏக்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்எல் ஏக்கள் கல்யாண சுந்தரம், வைத்தியநாதன், கே.எஸ்.பி. ரமேஷ், லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, பிரகாஷ்குமார் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் கோவா வர வேண்டுமென அழைப்பு விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x