Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

தொடர்மழை சேதங்களுக்குப் பிறகு - புதுவையில் மீண்டும் நெல் நடவுப்பணி தொடக்கம் :

புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமாக பெய்தது. இதனால் புதுச்சேரி வெள்ளக்காடானது.

தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் ஏராளமான விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக பாகூர், திருக்கனூர், மணமேடு, கரையாம்புத்தூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு மழை நிவாரணத்தை அரசு அறிவித்துள்ளது.

தற்போது மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. முற்றிலுமாக நீர் வடிந்த விளை நிலங்களில் விவசாயிகள் வயல் களை மறு உழவு செய்து, மீண்டும்நெல் நடவுப் பணியை தொடங்கியுள்ளனர். பாகூர், மணமேடு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் நடவு பணியை மேற்கொண்டனர். அதேநேரத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடவு பணிசெய்யும் விவசாயிகள் அச்சமடைந் துள்ளனர். மேலும் மற்ற பயிர்களைநட்டிருந்த விவசாயிகள் அரசின்நிவாரணத்தை எதிர்பார்த்துள்ள னர். இந்த நிவாரணத் தொகை கிடைத்த பிறகு மறு நடவு பணிகளை அவர்கள் தொடங்குவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x