Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருவேதிகுடி கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வர் கோயிலுக்கு சொந்தமான 1.86 ஏக்கர் நஞ்சை நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த vv35 ஆண்டுகளாக சாகுபடி செய்தவர், அதற்கான குத்தகை தொகையான ரூ.9.35 லட்சத்தை செலுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து, கோயில் நிர்வாகம் குத்தகையை பலமுறை கேட்டபோதும், செலுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம், தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் குத்தகைதாரர் மீது வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம் குத்தகைதாரர் பணம் செலுத்தாததால், கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கலாம் என அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, வருவாய் நீதிமன்ற உத்தரவின்பேரில், வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், பாத்திமாபீவி, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், நில அளவையர் ராமலட்சுமி, அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், கோயில் தக்கார் பிருந்தாதேவி, தஞ்சாவூர் அறநிலையத் துறை ஆய்வாளர் கீதாபாய், கோயில் எழுத்தர்கள் பஞ்சநாதன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நெல் பயிரிடப்பட்டிருந்த நஞ்சை நிலம் மீட்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT