Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம் தாதவள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் செல்வராசு முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் சட்டப்பேரவை நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 109 பயனாளிகளுக்கு 1 கோடியே 9 லட்சத்து 32 ஆயிரத்து 972 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT