Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம் கந்திலி அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாண்டிதுரை(31). இவர், நேற்று முன்தினம் மாலை தனது இரு சக்கர வாகனத்தில் கந்திலியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியதில் பாண்டிதுரை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பாண்டிதுரை மீட்கப்பட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து, விபத்து நடந்த இடத்துக்கு சென்ற கந்திலி காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதுதொடர்பாக கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT