Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு :

பெ.நா.பாளையம்: கோவை பெரியநாயக்கன்பாளையம், மரகதம் கார்டனைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்(70). இவர், கடந்த 20-ம் தேதி காரைக்காலுக்குச் சென்று விட்டார். இவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், கடந்த 21-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சத்தியமங்கலத்துக்குச் சென்று விட்டனர். நேற்று முன்தினம் கோவைக்கு திரும்பிய பாலச்சந்திரன் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவிலிருந்த 9 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக பாலச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x