Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

பாலியல் தொல்லையால் : பள்ளி மாணவி தற்கொலை முயற்சி :

கருமத்தம்பட்டி: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 14 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இச்சிறுமி நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றார். மதியம் இடைவேளையின்போது, பள்ளியில் சிறுமி மயங்கி விழுந்தார். உணவில், சாணிபவுடரை கலந்து தின்று அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, கருமத்தம்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டருகே வசிக்கும் 37 வயது நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x