Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வரும் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் 26-ம் தேதி காலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை அலுவலர்கள் விளக்கங்களை அளிக்கவுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x