Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமம் முத்தாலம்மன் கோயில் விழாவில் தங்களுக்கும் மரியாதை வேண்டும் என ஒரு தரப்பினர் கேட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் மறுத்துவிட்டனர்.
இதனால், இரு தரப்பினரிடையே முன்விரோதம் உருவானது.
நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் (28) தரப்பைச் சேர்ந்தோருக்கும் வேல்முருகன் (40) தரப்பைச் சேர்ந்தோருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண் டனர். தகவலறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், நத்தம் இன்ஸ் பெக்டர் ராஜமுரளி ஆகியோர் கிராமத்துக்குச் சென்று விசாரித் தனர். பின்னர், 23 பேர் மீது வழக்குப்பதிந்து 13 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT