Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி யின் நேரலையை ரங்கம் ரங்க நாதர் கோயிலுக்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து ரங்கம் ராகவேந்திரா வளைவு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரகண்ட் மாநிலம் கேதர் நாத்தில் ஆதி சங்கரர் சிலையை நவ.5-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த நிகழ்ச்சியின் நேரலை, ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் ஒளிபரப்பு செய் யப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் கு.அண்ணா மலை உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றனர். இதைக் கண்டித் தும், கோயிலுக்குள் நேரலையை ஒளிபரப்ப அனுமதி வழங்கிய கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.தர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வீரமுத்து மற்றும் நிர்வாகிகள் டி.சுப்பிரமணி, எஸ்.ரகுபதி, எஸ்.கோவிந்தன், எஸ்.வெற்றிவேல், எஸ்.இளங்கோ, ஏ.சந்துரு, ஆர்.விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x